Thursday 15 December 2011

முக்கிய செய்திகள் !!!

வணக்கம் !!                                                                                                                                                                                           -                       இன்றைய முக்கிய செய்திகள்!!!!!!!!!சென்னையில் வயிறு -காயிதா இயக்க  தீவிரவாதி ஒருவன் பிடிபட்டார்.இவர் அமைதி பூங்காவான தமிழ்நாட்டை வன்முறை நாடக மாற்றும் வேளைகளில் ஈடுபட்டது கூர்க்கா மற்றும் செக்யூரிட்டி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.                                                                       -                                                                                                                                                                                                -  -   விரிவான செய்திகள் !                                                                                                                             -                                                      தமிழ்நாட்டை சீர்குலைக்க முயற்சி செய்த குற்றத்திற்காக சர்வதேச தீவிரவாதி ஒருவனை சென்னையில் நேற்று இரவு கூர்க்கா மற்றும் செக்யூரிட்டி ஆகிய துறைகள் இணைந்து மடக்கி பிடித்தனர். இவன் இதுவரை 4000000 ஈக்களையும் 56000000 கொசுக்களையும் கொன்று குவித்துள்ளான்.அது மட்டும் இன்றி 1600 மனித கண்களை சேதபடுதியதாக வும் இவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவன் யாரையும் அடிக்கவில்லை மாறாக நடித்து இவற்றை செய்தான் என்பது அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யத்தை வர வழைக்கிறது.மேலும் இவன் நடித்து வந்த ஒரே படத்தில் இவற்றை செய்து முடித்துள்ளான் .இதற்கு மேலும் இவனை விட்டு வைக்க கூடாது என்பதே ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் குரலாக ஒலித்தது .இவரை பிடிக்க அதிகம் செலவகவில்லை .நித்ய மேனன் உங்களுடன் நடிக்க சம்மதிச்சுட்டார் னு சொன்னவுடன் வந்து வலையில் சிக்கி கொண்டார் . அந்த நடிகைக்கு தான் நன்றி சொல்லவேண்டும் .                                                                             .                                                                                                                                                                                   .                 மேலும் 'இவரை மடக்கி பிடித்த செக்யூரிட்டி கூறியதாவது -சார் இவர் ரொம்ப மோசம்னு கேள்விப்பட்டோம் சார் அன்னிலேர்ந்து சுமார் ஒரு 225 நாளா பின்தொடர்ந்து பார்த்தோம் அவரோட படம் ஒன்னு (நடிச்சதே ஒன்னுதான்)225  ஓடுச்சாம் அதோட விழாவுல அவரே தலைமை தாங்க வந்தார்னு கண்டுபிடிச்சோம் இவர சுத்து போட்டு நின்ன எங்க ஆபிசர்கள பாத்து ஒரு கோரிக்கை வச்சாரு சார். அது என்னன்னா அவரு தல மேல மட்டும் கை வைக்க கூடாதுன்னு சொன்னாரு. ஏன்னா மண்டைல எதுவும் இல்லன்னு அவுங்க அப்பா சொன்னதால டோப்பா வச்சிருக்கேன். அதையும் எடுத்துட்டா அப்பாவோட ஆசை நிறைவேராம போயிடும் .நான் ஹீரோ ஆவனுன்ற என்னோட ஆசை பறிபோய்விடும்.                                                                                                         .                                                                                                                                                                 .                   அப்பேற்பட்ட அந்த தீவிரவாதி யார் தெரியுமா ! அவர் தான் அகில உலக நாயகன் ! ஆஸ்ட்ரேலியா கேப்டன் ! பெரிய தளபதி !மிளகு ரச நாயகன் ! தோசை நாயகன் !அறுவை கிங் ! நம்ம பவர் ஸ்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  நம்ம தீவிரவாதி கூறியது > நீங்க என்ன கைது பண்ணலும் சரி நா மக்களை துன்புருதிட்டே தான் இருப்பேன் ! நான் உள்ள இருந்தாலும் வெளிய என்ன நடக்கனும்னு முடிவு பண்றது நான்தான். அடுத்ததாஆனந்த தொல்ல ஒன்னு கொடுக்கபோறேன் .அவ்ளோ பெரிய கொடுமைய  மக்களால் கண்டிப்பா தாங்க முடியாது .அடிச்சு சொல்றேன் இந்த வாட்டி குறஞ்சது ஒரு 50000000000 பேத்துக்கு  வந்தி பேதி வரல எம் பேரு அது இல்ல.அது மட்டும் இல்ல வரிசையா (மொக்க)படங்கள்ல வந்து மக்களை பயமுறுத்த போறேன்.இனி பவர் னு சொன்னா பயர் எரியும் பாருங்க !!!!!!!!